அநீதிகளின் ஆணிவேர்- பகுதி 2

தயவு செய்து பொறுமையாக அநீதிகளின்ஆணி வேர் முதல் பாகம் படித்து விட்டு  இதை தொடரவும் இது வெறும் யூகமோ கற்பனையோ அல்ல மிகுந்த ஆய்வு செய்து அதன் சாரத்தை மட்டுமே உங்களிடம் பகிர்கிறேன். உலகத்தை உள்ளிருந்து  அரித்துக்கொண்டிருக்கும் கரையான்கள் பற்றிய பதிவு. வெறுமனே வாசித்து கடந்து விடாமல் இதன் மீது சிந்தனையும் ஆய்வுகளும் செய்து பார்க்க வேண்டுகிறேன்.
 

சாத்தானுக்கு எதிரான சரியான மார்க்கம் எது?
   உலகில் பல மதங்கள் இல்லவே இல்லை,ஒரே மதம் தான்,அந்த ஒரே மதம் எதுவென அறிய கடவுளை முதலில் பரிந்து கொள்ள வேண்டும். இதுபற்றி இன்னொரு பதிவில் விளக்கலம். மதங்கள் தேவை தானா? கடவுள் உண்டா? என்றெல்லாம கேட்பவர்க்கு தேவைப்பட்டால் தனிப்பதிவு  இப்போதைக்கு இறைவன் புறத்திலிருந்து வந்த  உண்மையான மதக் கொள்கை எதுவென அறிய சில குறிப்புகள்
1) எந்த மதம் உருவ வழிபாடு,தனி மனித வழிபாடு,மூட நம்பிக்கைகளுக்கு எதிரான கருத்துக்களை கொண்டுள்ளதோ அது.
2) எந்த மதம் மனிதர்கள் அனைவரும் சமமானவர்கள், அடிமைத்தனம் கூடாது, பெண்களை துஸ்பிரயோகம் செய்யக்கூடாது என்று வலியுறுத்துகிறதோ அந்த மார்க்கம்
3) எந்த மதம் இறைவன் ஏகன் எனக்கூறி இறைவனுக்கு இணை வைப்பதை கடுமையாக எதிர்க்கிறதோ.
4) எந்த மதம் ஒழுக்கமான வாழ்க்கையை வலியுறுத்துகிறதோ எந்த மதம் விபச்சாரம் மது போன்ற தீமைகளிலிருந்து மனிதர்களை விலகியிருக்க சொல்கிறதோ அந்த மார்க்கம்
5) எந்த மதத்தில் இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையே இடைத்தரகர்கள் இல்லையோ அந்த மார்க்கம்
6) எந்த மார்க்கம் சைத்தானிடமிருந்து பகிரங்கமாக மனித உள்ளங்களை பாதுகாக்க இறைவனை வேண்ட சொல்கிறதோ அந்த மார்க்கம்.
8) எந்த மதம் பகுத்தறிவு ,ஆன்மீகம் எனும் இரு துருவங்களையும் விளக்குகிறதோ அந்த மார்க்கம்.  
மேலே சொன்னவை யாவும் சைத்தானுக்கு எதிரான மார்க்கத்தின் கூறுகள். உங்கள் மதம் எதுவானாலும் இறைவனை என்ன பேரிட்டு அழைத்தாலும் மேற்கண்ட கூறுகள் உங்கள் நம்பிக்கையில் இருந்தால் நீங்கள் இறை சக்தியின் பாதுகாப்பில் இருக்கிறீர்கள். சாத்தானின் சூழ்ச்சிகளில் முக்கியமான ஒன்று உங்கள் மத நம்பிகைகளில் ஊடுருவி அதன் கருத்துக்களை தனக்கு சாதகமாக மாற்றி அந்த மதத்தை தன்வசப்படுத்துவது. இன்று அநேக மதங்கள் சைத்தானின் சூழ்ச்சிக்குப் பலியாகி திரிக்கப்பட்டுவிட்டது. உங்கள் நம்பிக்கைகளை ஆராய்ந்து பாருங்கள் மேற்சொன்ன கூறுகளுக்கு அது மாற்றமாக இருந்தால் அந்த மார்க்கம் சைத்தானின் பிடியில் உள்ளது விலகிக்கொள்ளுங்கள். சைத்தானின் பிடியிலிருந்த தப்பிக்க இறைசக்தியின் உதவி தேட வேண்டும் இறை சக்தியில் அடைக்கலம் தேட வேண்டும் எது உண்மையான இறை சக்தி என அடையாளம் காண வேண்டும். மனது முழுவதும் தீயதை விட்டு விலகி நன்மையின் பால் நாட்டம் கொள்ள வேண்டும்.அதன் மூலம் சைத்தான் உருவாக்கி மனிதனை கட்டிப் போட்டிருக்கும் அத்தனை போலியான மாயையின் விலங்குகள் ஒவ்வொன்றாக அவிழும்.மனம் உள்நோக்கி திரும்பும். தான் யார் என்று மனிதன் கண்டறிவான்.
நாம் யார் ?
நாம் இருப்பதாக உணரும்  தன்னுணர்வு மட்டுமே உண்மை.இது இடம் பொருள் , காலம் என்ற மாயைகளை உருவாக்கி தன்னை அதில் ஒரு இடம் காலத்தில் வாழும் ஒரு உடலாக நினைக்கிறது.தன்னையே பலதாக முடிவிலாமல் பிரித்து உணர்கிறது, இங்கே கொல்பவனும் இவன்தான்  கொல்லப்படுவதும் இவன்தான் அதை பார்த்துக்கொண்டிருப்பவனும் இவன்தான் ,எதிர்த்து தடுப்பவனும் இவன் தான்.ஆனால் அதை அவன் வெவ்வெறாக உணர்கிறான், இப்போது சொல்லுங்கள்.அறிவில் உண்டாகும் இந்த மாய விளையாட்டில் நீதியை எப்படி செயல் படுத்துவது, விழித்துக்கொண்ட ஆன்மா இந்த உண்மையுணர்ந்து அமைதியாகி விடும் ,அது தான் பேரானந்தம் சொர்கம், விழிக்காத ஆன்மா இந்த கனவின் துன்பத்திலிருந்து விடுபடாமல் அனுபவிப்பது நரகம்
விழித்துக்கொண்ட மனதுக்கு அனைத்து உயிர்களுமாக தோன்றுவது ஒன்றே எனப் புரியும். எல்லா உயிர்களிடமும் அன்பு பெருகி அது கருணையாக மாறும்.உலகின் அனைத்து பொருட்களும் சம்பவங்களும் கருத்தில் உருவாகும் காட்சியே என புரியும்; யாரும் யாரையும் கொல்ல முடியாது.கொல்லுவதும் சாவதும் வெறும் தோற்ற மயக்கங்களே.
அப்படியானால் ஒரு தீமை நடக்கும் போது எதுவும் செய்யாமல் கைகட்டி பார்த்துக்கொண்டிருக்கலாமா? எல்லாம் இறைவன் நாட்டப்படியல்லவா நடக்கிறது ? என்ற கேள்வி எழுகிறதல்லவா
தீமை தடுப்பது பார்த்துக்கொண்டு தடுக்காமல் இருப்பதற்கான சாய்ஸ் உங்களிடமே உள்ளது அதில் .நீங்கள் எந்த செயலை தேர்வு செய்தாலும் அதன் மூலம் நீங்கள் உலகை காப்பாற்றவில்லை உங்களை தான் காப்பாற்றவோ கெடுதல் செய்யவோ செய்கிறீர்கள்.தீமையை தடுப்பதன் மூலம் உங்கள் தன்னுணர்வு சாத்தானுக்கு எதிரான நிலை எடுக்கிறது. அனுமதிப்பதன் மூலம் சாத்தானின் வலையில் வீழ்கிறது. எனவே உலகின் தீமைகளை தடுப்பது ,மனதால் வெறுப்பது நம்மை மேலும் இறை சக்தியை நமக்கு நெருக்கமாக்கும்
மனிதனுக்கு எதிரியாய் இறைவனுக்கே சவாலிட்டதாய் வெளிப்பட்ட சைத்தான் கூட ஒரு மாயையில் உள்ள படைப்புதான். சைத்தானும் இறைவனின் அடிமைதான். இறைவன் கட்டளைக்கு மாறாக அதனால் செயல் பட முடியாது ஏனெனில் இறைவனின் இருப்பு உண்மையின் மீது இருக்கிறது. சைத்தான் ஒரு படைப்பு, மாயை. அது தீயதை காட்டி உண்மையை உணர வைக்கும் இறை திட்டத்தின் ஒரு பகுதிதான். சைத்தான் இல்லாவிட்டால் அவனது கொடுமைகள் இல்லாவிட்டால் மனிதர்களின் உள்ளம் நன்மையயும் இறைவனையும் அறிய வாய்ப்பில்லை என்ற உண்மைகள் புரியும். இந்த உலக கூத்துகள் கண்டு நகைப்பு வரும். இறை விளையாட்டு புரியாமல் தங்கள் இனத்தை காக்க மதத்தை காக்க இவர்கள் போராடுவது எல்லாம் அர்த்தமற்றது. சத்தியத்தை உணர்வது மட்டுமே மனிதன் செய்யும் மிக அர்த்தமுள்ள செயல். உலகின் அனைத்து துன்பங்களிலிருந்தும் விடுதலை பெற ஒரே வழி விழிப்புணர்வு பெறுவது மட்டுமே இந்த உண்மைகளை சிந்தித்து உணர்ந்து வெற்றி பெறுவீர்கள்.

(தொடரும்) 

அநீதிகளின் ஆணிவேர்: மற்ற பகுதிகளுக்கு  இங்கே க்ளிக் செய்யவும் 


கருத்துகள்